web log free
October 19, 2025

ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக நாமல் ராஜபக்ஷ கருத்து, சித்தப்பாக்களை குறிவைத்து தாக்குதல்!

நாட்டு மக்கள் கஸ்டத்தில் இருக்கும் போது அரசாங்கம் இரண்டாகப் பிரிந்து பெரும்பான்மை தேடி அரசியல் செய்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு, நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதிலும் எதிர்கட்சி ஆர்ப்பாட்ட பேரணி செய்வதிலும் இருக்கும் நிலையில் ஆளும் கட்சி இரண்டாகப் பிரிந்து பெரும்பான்மை கட்டியெழுப்ப முயற்சித்து கொண்டிருக்கிறது. ஆனால் நாடு கஸ்டத்தில் இருக்கிறது. நாங்கள் உண்மையில் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறோமா அல்லது மாற்று நிகழ்த்தி நிரலில் வேலைபளுவாக இருக்கிறோமா? என்று நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd