web log free
September 07, 2024

பாராளுமன்ற வளாகத்தில் பலர் கைது செய்யப்பட்டதால் பதற்றம்

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.