web log free
October 18, 2024

ஜனாதிபதி அவசர நிலையை பிரகடனம் செய்தார்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .