web log free
June 30, 2026

சஜித் பிரேமதாஸவின் வீட்டுக் கதவை தட்டும் அதிஷ்டம்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைத்தால், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் ஜனாதிபதி அழைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமயத் தலைவர்கள், மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து நாட்டை மீட்பதற்காக சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்டால் அன்றி, பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சஜித் பெயராமதாச தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd