web log free
July 30, 2025

பதற்றம் நீடிக்கிறது - ஜனாதிபதி செயலகம் தொடர்ந்தும் முற்றுகை

நாடு முழுவதும் பல பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படும் நிலையில் தற்போது காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

இன்று காலை அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பொது மக்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து ஆவேசமடைந்த அரசாங்க எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக நாட்டின் பல பகுதிகளில் அரசியல்வாதிகளின் இல்லங்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.

அத்துடன் தற்போது அலரி மாளிகைக்குள்ளும் இவர்கள் நுழைய முயற்சித்த நிலையில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே கடும் கோபத்திலிருக்கும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd