web log free
December 15, 2025

எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும்

நாட்டில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விநியோகம் திங்கட்கிழமை (மே 9) முதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என சிலோன் பெட்ரோலியம் தெரிவித்தது

" அமைதியின்மை தொடங்கியவுடன், எரிபொருள் பவுசர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் விநியோகத்தை நாங்கள் உடனடியாக நிறுத்தினோம். எந்தவொரு எரிபொருள் பவுசரையும் மக்கள் தாக்கினால், சாத்தியமான தீ பரவி குறிப்பிட்ட பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்" எனவும் தெரிவித்தது

எரிபொருள் பவுசர்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பு அங்கீகாரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபை (SLTB), புகையிரத திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதுகாக்கப்பட்ட ஆயுதப்படைகளுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd