web log free
March 28, 2024

திருகோணமலை பில்லோ ஹவுஸ் பங்களாவில் பாதுகாப்பாக இருக்கும் மஹிந்த குழுவினர்!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். 
 
இதற்கிடையே, பிரதமர் ராஜபக்ஷ குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.
 
இந்த செய்தி உண்மையில்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் தனது குடும்பத்தினருடன் திருகோணமலையில் உள்ள பில்லோ ஹவுஸ் என்ற பங்களாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது என்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காக பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இங்கு தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.