web log free
April 30, 2025

சஜித்துக்கு குட் பாய் சொல்கிறார் ஹரின்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனித்து செயல்பட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். 

நாடு தற்போது உள்ள நிலைமையில் அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் அவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் தரப்பிற்கு ஆதரவு வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சஜித் பிரேமதாஸவை பிரதமர் பதவியை ஏற்று ஆட்சி அமைக்குமாறு ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தி வருகின்றார்.

எனினும் சஜித் பிரேமதாச அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால் தனித்து செயல்பட ஹரின் முடிவு செய்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd