web log free
February 04, 2026

படகு மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற பிள்ளையான்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து மகிந்தராஜபக்ச வெளியேறியதை தொடர்ந்து பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படகு மூலம் மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ள பிள்ளையான் அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயற்சி செய்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் அவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பிள்ளையான் மீது கொலை வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd