web log free
April 25, 2024

மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரி கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலிமுகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி சோசலிச இளைஞர் ஒன்றியம் (SYU) போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றது.

இம்மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதுடன் மேலும் சிலர் மரணமடைந்தனர்.