web log free
May 10, 2025

சமையல் எரிவாயு பிரச்சினை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரும்

எரிவாயுவிற்கான நெருக்கடிக்கு முழுமையான தீர்வு கிடைக்க மேலும் ஒன்றரை மாதங்கள் செல்லுமென லிட்ரோ நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலையினால் ஏற்கனவே நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையின் கீழ் நாளொன்றுக்கு 30,000 சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஓமானிலிருந்து எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று(19) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தாய்லாந்தின் சியம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரமளவில் குறித்த நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக லிட்ரோ தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd