web log free
October 22, 2025

கர்ப்பிணி மனைவி வயிற்றில் கத்தியால் குத்திய கணவன்! சிசு வயிற்றுக்குள் பலி

கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்று வயிற்றில் இருந்த சிசுவையும் கொன்ற கணவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது வயிற்றில் இருந்த குழந்தை கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை அகற்றப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd