web log free
April 25, 2024

பசில் ராஜபக்ஷவை பதவி நீக்கியமையே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாம்

பசில் ராஜபக்ச மற்றும் பி.பி.ஜயசுந்தர பதவியில் இருந்து நீக்கப்பட்டமையே இன்று இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளக் கணக்கில் பதிவிட்டுள்ளதாவது, 

2015 இல் மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தமையே இன்றைய அனைத்து நெருக்கடிகளுக்கும் ஆணிவேர் என்றே கூற வேண்டும். பின்னர் நல்லாட்சி நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது. பின்னர் கோட்டாபாய வந்தார். அதனுடன் நோய் வந்தது. நாடு அந்நிய செலாவணியை இழந்தது. 2015 தோல்வி இந்த பின்னடைவுகள் அனைத்திற்கும் மையமானது.

இந்த அரசாங்கம் இரண்டு பெரிய தவறுகளை செய்துள்ளது. பி.பி.ஜெயசுந்தரவின் நீக்கம். பசில் ராஜபக்சவின் நீக்கம். இலங்கையின் பொருளாதார இலக்கை 22 பில்லியன் டொலரில் இருந்து 80 பில்லியன் டொலர்களாகக் கொண்டு வந்த இந்த இருவரை விடவும் இலங்கையின் பொருளாதார இலக்கை புரிந்து கொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்களை ஒழிப்பது நெருக்கடிக்கு மத்தியில் எங்களை தனிமைப்படுத்தியது என்று கூறியுள்ளார்.