web log free
June 29, 2025

இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மோடியின் புகைப்படம்

அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தொங்கவிடப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவை தவிர வேறு புகலிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இந்தியாவில் இருந்து பொருட்களை விநியோகிக்கும் இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கை உள்ளது என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd