web log free
April 20, 2024

பொலிஸாரை அநாகரீகமாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் வேதராச்சியின் மகனுக்கு மனோ கணேசன் கண்டனம்

பொலிஸாருக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகித்த பாராளுமன்ற உறுப்பினர் வேதாராச்சியின் மகன் மற்றும் மருமகளுக்கு மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற வாக்குவாதத்தில் பயன்படுத்தப்பட்ட அவமானகரமான வார்த்தைகள் மற்றும் நடத்தையை கண்டிப்பதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொலிஸாருடன் ஒத்துழைப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அவரது மகன் மற்றும் மருமகளுக்கு வழங்குமாறு எம்.பி.வெதராச்சியிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.