web log free
July 03, 2025

அதிபரை தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் கைது !

பொத்தனேகம மகா வித்தியாலய அதிபர் ருவன் சிறி ஹேரத் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபரின் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளின் போது தொழிற்சங்க தலைவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் அனுராதபுரம் பொலிஸாரிடம் நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். மாகாணக் கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே இந்த தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் லக்மால் விஜேரத்னவின் பணிப்புரையின் பேரில் சிஐ சமிந்த குணசேகர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்

Last modified on Saturday, 04 June 2022 04:43
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd