web log free
October 22, 2025

மீண்டும் டீசல் பிரச்சினை! மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.

தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2500 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் தற்போது சுமார் 40,000 மெட்ரிக் டன் டீசல் உள்ளது.

அடுத்த 09 அல்லது 10 நாட்களில் ஒரு கப்பல் வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது நிச்சயமற்றதாகவே உள்ளது.

இந்தியாவின் உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் வரும் 16ம் திகதி வரும் வரை, தற்போதுள்ள டீசல் இருப்புகளை நிர்வகிக்க கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd