web log free
September 16, 2024

பிரதமர் ரணிலின் திட்டங்களுக்கு கரு ஜயசூரிய ஆதரவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தில் குழுக்களை மிகவும் திறம்பட செயல்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தணிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துத் பிரதமர் விளக்கமளித்தார். அந்த நடவடிக்கைகளுக்கு நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தனது ஆசிர்வாதங்களை வழங்கும் என கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது அரசாங்கத்தின் பாரிய முன்னெடுப்பாக அமைய வேண்டுமென தமது அமைப்பு உறுதியாக நம்புவதாக ஜெயசூரிய மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, கலாநிதி சுஜாதா கமகே, சுனில் ஜயசேகர, ஹரேந்திர தசநாயக்க, ரிச்சர்ட் தனிப்புலஆராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.