web log free
March 22, 2026

நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அளவு பாரிய வேலைநிறுத்தம்!

அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை தொடர்பான சட்டமூலத்தை நாளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா குறித்து எந்த தொழிற்சங்கத்திடமும் கருத்து கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.

நாளை காலை வரை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் படிப்படியாக செயலிழந்துவிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளை மீறி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் கிடைக்காது எனவும், அத்தியாவசிய சேவைகளுக்காக உள்ள ஜெனரேட்டர்கள் இதற்காக பயன்படுத்தப்படும் எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd