web log free
May 14, 2026

மஹிந்த உள்ளிட்ட குழுவினர் கருப்பு பட்டி அணிந்து சபையில் எதிர்ப்பு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கடந்த மே மாதம் 9ஆம் திகதி கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு பட்டி அணிந்திருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd