பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சரியான திட்டம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சரியான வேலைத்திட்டத்துடன் நாட்டைக் கட்டியெழுப்ப பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறுகிறார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சிகள், சக்திகளை ஒன்றிணைத்து அவர்களின் கோரிக்கையுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என சம்பிக்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.