இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்குரிய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பிரதேசங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்து மற்றுமொரு அமைச்சரை நியமித்ததை அடுத்து அவரது பேச்சு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.