இந்திய நிதியுதவியுடன் எரிபொருள் தாங்கி கப்பல் நாளை இலங்கைக்கு வரவுள்ளது.
இதன் பின்னர், ஒரு டீசல் அல்லது பெட்ரோல் கப்பல் வருவதற்கான சரியான திகதியைக் குறிப்பிடுவது சாத்தியமற்றது.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பல கிலோமீட்டர் நீளமுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் வரிசை அடுத்த சில நாட்களில் மேலும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சுமார் 20,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் சுமார் 10,000 மெற்றிக் தொன் பெற்றோல் உள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு வந்த எரிபொருள் தாங்கி ஒன்று கட்டணம் செலுத்தப்படாமையால் சுமார் 20 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.