web log free
February 02, 2026

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்! வரிசையில் நிற்க வேண்டாம்

இன்று முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விடுவிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்கள் வரிசையில் காத்திருந்து தேவையற்ற நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என தொழிற்சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இன்று முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்துள்ளார்.

நாளை நாட்டிற்கு வரவுள்ள டீசல் கப்பலை இறக்கிய பின்னரே வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டீசலை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் விநியோகம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல் விநியோகத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Last modified on Wednesday, 15 June 2022 05:07
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd