web log free
May 08, 2024

நாட்டின் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயமாக நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நாட்டில் அடுத்த பிரதமர் தானே என்றும், பிரதமர் பதவியைப் பெறுவதற்கான அதிகூடிய தகைமைகளை கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தாம் என்றும் அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் கூட்டணி அமைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.