web log free
March 28, 2024

வரிசைகளில் பிக்குகளுக்கு தனிச்சலுகை , கொதிப்பில் பொதுமக்கள்!

நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் காணப்படும் நீண்ட வரிசைகளை பொருட்படுத்தாது பௌத்த பிக்குமார் வந்து எரிபொருளை பெற்று செல்வதாக வரிசைகளில் நிற்கும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சில பிக்குமார் விகாரைகளின் வாகனங்கள் மாத்திரமல்லாது தமக்கு நெருக்கமானவர்களின் வாகனங்களை எடுத்து வந்து வரிசையில் நிற்காது எரிபொருளை நிரப்பி செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் பௌத்த பிக்குமார் என்பதால், வரிசையில் இருப்பவர்கள் எவரும் எதிர்ப்புகளை வெளியிடுவதில்லை.

பிக்குமார் அத்தியவசிய சேவைகள் பட்டியலில் இல்லாத நிலைமையில், இது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வரிசையில் நிற்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last modified on Saturday, 18 June 2022 10:11