web log free
December 07, 2025

சீனா - இலங்கை கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தம்

1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்துவதற்கு மூன்று மாத கால வெளிநாட்டு கையிருப்பு இலங்கையில் இருக்க வேண்டும் என்ற இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஷரத்தை திருத்துமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

அந்நியச் செலாவணிக்காக சீனாவுடன் கையெழுத்திட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, பரிமாற்றத்தைப் பயன்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு இருப்புக்களை இலங்கை வைத்திருக்க வேண்டும்.

இன்று இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இல்லாத காரணத்தால் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd