web log free
December 07, 2025

மொட்டு கட்சி பிரதமரின் கீழ் மீண்டும் புதிய ஆட்சி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

69 இலட்சம் மக்கள் ஆணை இருந்தும் மொட்டு பிரதமரின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் ஏதாவது நல்லது நடக்கும் எனவும், முன்னைய வகையிலான அரசாங்கத்தை எவ்வாறு அமைப்பது என்பதை நாம் கவனிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd