web log free
May 02, 2025

தனது மார்பகங்களை கிண்டல் செய்பவர்களுக்கு வார்த்தைகளால் செருப்படி கொடுத்துள்ள ஹிருணிக்கா!

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது மார்பகங்கள் வெளித் தெரிந்தது தொடர்பில் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஹிருணிக்கா பிரேமச்சந்திர, மூன்று பிள்ளைகளுக்கு பாலூட்டிய தனது மார்பகங்கள் குறித்து பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.

அவருடைய முகநூல் பதிவின் தமிழ் வடிவம் பின்வருமாறு, 

"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்! அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். 

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன். 

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!"

- ஹிருணிகா பிரேமச்சந்திர  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd