web log free
May 02, 2025

வாயில் என்ன பிட்டா? கோட்டா விடம் கேட்கிறார் வாசு!

உலகின் ஏனைய நாடுகளின் தலைவர்களிடம் பேசும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாயில் பிட்டு காரணமாகவா ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன்  பேசவில்லை என்று கேட்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 10 சுயேச்சைக் கட்சிகளுக்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய, ரஷ்யா ஜனாதிபதி புட்டினுடன் பேச மறுப்பது நமது நாட்டுக்கு பாதகமான அரசியல் நிலையென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd