web log free
April 25, 2024

பூசாரியின் தலையை வெட்டி கங்கையில் வீசிய சந்தேகநபர் கைது

அக்குரஸ்ஸ, திப்பட்டுவ பிரதேசத்தில் வீடொன்றினுள் பூசாரி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பலகாவல பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் (24) என்ற இளைஞர் ஆவார்.

சந்தேகநபர் நில்வல கங்கையில் வீசிச் சென்ற பூசாரியின் தலை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.