web log free
December 07, 2025

நாடு உத்தியோகபூர்வமற்ற முறையில் மூடப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் அனைத்து வீதிகளும் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.
நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததையடுத்து நாடு உத்தியோகபூர்வமற்ற முறையில் மூடப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் வாகனங்கள் செல்வது குறைந்துள்ளதுடன், பொது போக்குவரத்து சேவைகள் முழுமையாக இயங்கவில்லை.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து 50%க்கும் குறைவாகவே குறைந்துள்ளது.

ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே நாட்டில் இயங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அடுத்த எரிபொருள் நாட்டிற்கு வரும் வரை இது தொடரும்.

எரிபொருள் தாங்கியை ஆர்டர் செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு குறைந்த பட்சம் 08 நாட்கள் தேவைப்படுவதுடன் தற்போதைய உலக சூழ்நிலையில் அந்த வகையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd