web log free
May 02, 2025

இருவர் சுட்டுக் கொலை

மொரட்டுவை கட்டுபெத்த சந்​தியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd