web log free
September 19, 2024

ஜனாதிபதி பெயில் , உடனடியாக பதவி விலக வேண்டும் - டிலான் பெரேரா

நாட்டின் பொருளாதார நிலைமையை நோக்கும் போது அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியில் இருந்து வந்ததாகவும், நாடு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்றும், அது சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்தது போல் தோன்றுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

எனவே கோட்டாபய ராஜபக்ச உடனடியாக ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்து பாராளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், செயல் தலைவர் ஒருவர் மூலம் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்றார்.