web log free
May 22, 2026

புட்டினுக்கு கோத்தா அழைப்பு, எரிபொருள் பிரச்சனை தீரும் அறிகுறிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க கடன் நிவாரண நிதியில் இருந்து எரிபொருளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது வெற்றிகரமான தொலைபேசி உரையாடல் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான Aeroflot விமான சேவையை மீள ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd