web log free
August 23, 2025

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

ஓல்கொட் மாவத்தை மற்றும் கோட்டையைச் சுற்றியுள்ள ஏனைய இடங்களில் தங்கி பெடகொடு பிரதேச மக்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த பகுதியில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிக்குகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Last modified on Thursday, 07 July 2022 05:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd