web log free
September 16, 2024

பொலிஸாரின் கைகளில் விளையாட்டு பொருளாக மாறியுள்ள கண்ணீர்புகை

இலங்கையில் அரசாங்கத்திற்கெதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி மக்களை போராட்ட பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில்,நேற்றைய தினம் கொழும்பில் அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் பொது மக்கள் ஒன்றுக்கூடாத சில பொது வீதிகளில், பொது போக்குவரத்து அமைதியாக இடம்பெறும் பகுதிகளில் தேவையற்ற வகையில்,கண்ணீர்புகை குண்டுகளை வீசி பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன், பொது மக்கள் பொலிஸாருக்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.