web log free
May 01, 2025

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது

நீர் விநியோக குழாய் உடைப்பு காரணமாக கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீர் விநியோகம் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd