web log free
April 26, 2024

ஜனாதிபதி பதுங்கி இருக்கும் பகுதி இதோ..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக பல்கலைக்கழக மாணவர் பேரவை தெரிவித்துள்ளது.

இன்றிற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கோரி ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.