web log free
April 24, 2024

கேஸ் வரிசையிலும் ஒருவர் பலி

கொட்டாவ பஸ் நிலையத்தில் எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ பகுதியைச் சேர்ந்த ஜயதிஸ்ஸ பெரேரா (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.