web log free
June 28, 2025

கோட்டாவுக்கு முன் ரணில் பதவி விலக வேண்டும் - கட்சித் தலைவர்கள் முடிவு

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை. 

பிரதமர் பதவி விலகியதும் சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக நியமித்து எதிர்கால அரசியல் தீர்மானங்களை எடுக்க கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd