web log free
April 23, 2024

ஜனாதிபதி மாளிகையில் கஞ்சா இழுத்தவர் கைது

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் கஞ்சா அருந்திக்கொண்டிருந்த செயற்பாட்டாளர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நீச்சல் தடாகத்திற்கு அருகில் மறைந்திருந்து கஞ்சா அருந்திய போதே கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.