web log free
April 30, 2025

வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படும்

விநியோகம் ஆரம்பிக்கும் வரை CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

எரிபொருளைப் பெறுவதற்கு தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு மற்றும் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஆகிய இரண்டும் கட்டாயமாக்கப்படும் எனவும், வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Last modified on Monday, 18 July 2022 05:18
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd