web log free
April 16, 2024

மூவரின் வேட்புமனு ஏற்பு! நாளை காலை 10 மணிக்கு இரகசிய வாக்கெடுப்பு

ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகபெரும, அனுர குமார திசாநாயக்க  ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து நாளை காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெருமவின் பெயரை சஜித் பிரேமதாச முன்மொழிய அதனை ஜி.எல்.பீரிஸ் வழிமொழிந்தார். 

ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை வழிமொழிந்தார்.

விஜித ஹேரத் முன்மொழிந்த அனுர குமார திசாநாயக்கவின் பெயரை ஹரிணி வழிமொழிந்தார்.