web log free
May 10, 2024

ஒரு வாரத்தில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை முறைப்படுத்தி ஒரு வாரத்திற்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதல் தடவையாக கூடிய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த வட்டாரங்களின்படி, ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கோட்டா முறையின் கீழ் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.