web log free
April 30, 2025

யார் விலகினாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி பலமாக பயணிக்கும்-பழனி திகாம்பரம்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர். மனோ கணேசன் அல்ல, நான் விலகினால்கூட கூட்டணி பலமாகப் பயணிக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து கூட்டணி மட்டத்தில் மனோ கணேசன் கலந்துரையாடவில்லை. சிலவேளை, வயதாகிவிட்டதால் அவர் அந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்.

யார் விலகினாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி பலமாக பயணிக்கும். இந்த கூட்டணியில் சிறந்த இளம் தலைவர்கள் உள்ளனர்"என கூறியுள்ளார்.

Last modified on Saturday, 30 July 2022 11:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd