web log free
September 08, 2024

யாழில் வாள்வெட்டு - 8 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம், கம்பர்மலை பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் ஊரனி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:52