web log free
June 27, 2025

கொழும்பில் பயங்கரம், ஒருவர் கொடூரமாக சுட்டுக்கொலை

கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், அவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவராவார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd