web log free
April 29, 2025

எரிபொருள் விலை உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நேற்று (11) சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது 98 அமெரிக்க டாலர்கள் மற்றும் 28 காசுகளாக விலை உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் (10) பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 96 டாலராக இருந்தது.

டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15ஆம் திகதி இரவுகளில் கண்டிப்பாக திருத்தம் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்னும் 4 நாட்களில் இந்த நாட்டில் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd