web log free
April 26, 2024

ஞானசார தேரரின் அறிக்கைக்கு ஜனாதிபதி ரணில் வைத்த ஆப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமது கட்சியுடன் நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதுதொடர்பான அறிக்கை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்தார்.